பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
அய்யப்பன்தாங்கல்; அய்யப்பன்தாங்கலில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்கையம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அய்யப்பன்தாங்கல், பஸ் பணிமனை அருகே, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், வளாகத்தில் விநாயகர், முருகன், கால பைரவர், சிவன் உள்ளிட்ட உப கோவில்களும் உள்ளன.ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சில மாதங்களாக, திருப்பணி செய்யப்பட்டு, இக்கோவில் புனரமைக்கப்பட்டது.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், 25 ம் தேதி, மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் மற்றும் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து, நேற்று காலை, 6:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையுடன் கும்பாபிேஷகம் துவங்கியது. 9:15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிேஷகம் நடந்தது.பின், 9:30 மூலவர் மற்றும் அனைத்து பரிவார தேவதைகளுக்கும், மகா கும்பாபிேஷகம் தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. போரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.