பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
பாகூர்; பனித்திட்டு கிராமத்தில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தில், ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் மூலவர் கோபுரம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.கடந்த 25ம் தேதி காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கோ பூஜை, தன பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று காலை 6.00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10.00 மணிக்கு, அமைச்சர் கந்தசாமி தலைமையில், ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், முன்னாள் அமைச்சர் ராஜவேலு, இந்து சமய அறநிலைய துணை ஆணையர் சிவசங்கரன் உள்ளிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 8.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.