* கடவுளின் பிள்ளைகளான நாம் அனைவரும் ஒரே ஜாதியினர். * யாரிடமும் உயர்வு, தாழ்வு காட்டாதீர். அனைவரும் நம் சொந்தமே. * செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். * கடவுள் ஒருவரே உலகில் என்றென்றும் நிலையானவர். * நான் நல்லவன் என கர்வப்பட வேண்டாம். உங்களை விட நல்லவர்களும் உலகில் இருக்கிறார்கள். * பிறரை இழிவாக கருதுபவன், தன் நிலையில் இருந்து தாழ்ச்சி அடைவான். * அறிவாளிக்கு பிறர் மீது பொறாமையோ, பொருள் ஆசையோ ஏற்படாது. * பிறரது குறையை சிந்திப்பவன் பாவி. தன்னை உணர்ந்து மகிழ்பவன் ஞானி. * பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தர்மம் செய்யாதீர். * மனித நேயத்துடன் பிறருக்கு இயன்ற அளவில் உதவுங்கள். * எப்போதும் கடவுளை சிந்தித்தால் நிம்மதியுடன் வாழலாம். * பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கியவர்கள் மீள்வது கடினம்.