Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாங்கூர் திவ்யதேச கோயிலில் 11 ... வராகி அம்மன் கோயிலில் கலயங்களில் மஞ்சள் நீர் ஊர்வலம் வராகி அம்மன் கோயிலில் கலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் 27ம்தேதி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் 27ம்தேதி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
11:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோயிலும் ஒன்றாகும். இங்கு வாரநாட்களில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்களும், சனி மற்றும் விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேரோட்டம், மிக சிறப்பாக நடைபெறும். தேர் திருவிழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். இந்த ஆண்டு மாசி மக தேர்த்திருவிழா இம்மாதம், 20 ஆம் தேதி கிராம சாந்தியுடன் தூங்குகிறது. அதைத்தொடர்ந்து, 21ஆம் தேதி கொடியேற்றமும், அன்று இரவு அன்னவாகனத்திலும், 22 ல் சிம்ம வாகனத்திலும், 23 ல்அனுமந்த வாகனத்திலும், 24 ஆம் தேதி கருட சேவை ஆகிய வாகனங்களில் அரங்கநாத பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அதைத்தொடர்ந்து, 25 ஆம் தேதி பெட்டதம்மன் அழைப்பும், 26 ஆம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 27ஆம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 28ஆம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், மார்ச் 1ஆம் தேதி தெப்போற்சவமும், 2 ல் சந்தான சேவை சாற்று முறையும், 3ஆம் தேதி வசந்தம் விழாவும் நடைபெற உள்ளன. தேர் திருவிழாவை முன்னிட்டு, தேருக்கு பாதுகாப்பாக வைத்திருந்த, தகரங்களை அகற்றி, தேரை சுத்தம் செய்யும் பணிகளில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து தேருக்கு அலங்காரம் செய்யும் பணிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.9ல்) மலையப்பசுவாமி அனுமன் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது புதன்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாவது நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 11:30 மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரதாம்பாள் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜையில் நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம் ... மேலும்
 
temple news
கொட்டாம்பட்டி; ஒட்டக்கோவில்பட்டி டி வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar