Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை பத்ரகாளியம்மன் கோவில் ... திம்மநாயக்கன்புதூரில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு திம்மநாயக்கன்புதூரில் பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதேஸ்வரன் மலைக்கு செல்ல வெளியூர் பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
மாதேஸ்வரன் மலைக்கு செல்ல வெளியூர் பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

08 மார்
2021
03:03

மேட்டூர்: மாதேஸ்வரன் மலைக்கோவில் பண்டிகையை முன்னிட்டு, கொரோனா பரவலை தடுக்க, வரும், 9 முதல், 14 வரை, வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அடுத்த, கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கோவிலில், வரும், 11ல் சிவராத்திரி, 13ல், மாசி அமாவாசை உற்சவம், 14ல், மாசி பண்டிகையை முன்னிட்டு பெரிய தேரோட்டம் நடக்க உள்ளது. இதனால், வரும், 9 முதல், 14 வரை, மாதேஸ்வரன்மலையில் நடக்கும் மாசி பண்டிகையில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். நடப்பாண்டு கொரோனாவால், கடந்த, 3ல், மாதேஸ்வரன் மலை கோவிலில், சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ரவி தலைமையில், கோவில் நிர்வாகத்தினருடன் கூட்டம் நடந்தது. அதில், பிற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. அதனால், இக்கோவிலில் நடக்கும் மாசி பண்டிகையில், வரும், 9 முதல், 14 வரை, மாதேஸ்வரன் மலைக்கிராம ஊராட்சியை சேர்ந்த பக்தர்களை தவிர, வெளியூர் பக்தர்கள், கோவிலுக்கு வரக்கூடாது என, முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்து, மேட்டூர் அடுத்த, பாலாறு கரையிலுள்ள, கர்நாடகா வனத்துறை சோதனைச்சாவடியை கடந்தே, மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டும். அங்கு, தமிழக பக்தர்கள், சுற்றுலா பஸ், வேன், இருசக்கர வாகனங்களில் வருவதை தடுத்து திருப்பி அனுப்ப, கூடுதல் போலீசாரை, 6 நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த, கர்நாடகா போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், பக்தர்கள் கோவிலுக்கு புறப்பட்டு, ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம் என, அக்கோவில் நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar