Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பங்குனி உத்திரம்: கிருஷ்ணகிரி ... ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம்: சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2021
05:03

பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், பங்குனி உத்திரத்தையொட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மாலையில் கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில், பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை, 10:00 மணிக்குசுவாமிக்கு திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டு, மதியம், 12:30 மணிக்கு, முருகன், வள்ளி, தெய்வானைக்குதிருக்கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியங்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.மாலையில், தேவியர்களோடு சுவாமி ரதத்தில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களில், பங்குனி உத்திர திருவிழா, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.- நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar