சின்னாளபட்டி : அமாவாசையை முன்னிட்டு சின்னாளபட்டியில் உண்ணாமுலையம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதே போல் கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோவிலில் பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தேவார பாராயணத்துடன் மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை சிறப்பு ஆராதனைகள் நடந்தது.