Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கமாய் ஜொலிக்கும் தஞ்சை பெரியகோவில்
எழுத்தின் அளவு:
தங்கமாய் ஜொலிக்கும் தஞ்சை பெரியகோவில்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
12:04

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் முழுவதும் நவீன விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், கோவில் தங்கம் போன்று இரவில் ஜொலிப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோவில், உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இக்கோவிலை பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில், மத்திய தொல்லியல் துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்., 5ம் தேதி நடந்த கும்பாபிஷேகத்தின் போது, சினிமா மற்றும் பல்வேறு கலை விழாவுக்கு ஒளி விளக்குகள் அமைக்கும் குழுவினர், பெரியகோவில் கோபுரம், முக்கிய சாமி சன்னதிகள் ஆகிய பகுதிகளில், மிளிரும் வகையில் நவீன ஒளி விளக்குகளை அமைத்தனர்.இது சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என பலரையும் கவர்ந்தது.பின்னர், கும்பாபிஷேகம் முடிந்ததும் விளக்குகள் அகற்றப்பட்டது. அப்போது, பெரியகோவில் முழுவதும் கும்பாபிஷேகத்தின் போது அமைப்பட்ட நவீன ஒளி விளக்குகள் போல அமைக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மத்திய தொல்லியல்துறை, மாமல்லபுரத்தைப் போன்று, தஞ்சாவூர் பெரியகோவிலையும் இரவு நேரத்தில் மிளிர வைக்கும் வகையில் நவீன மின்னொளி விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுத்தனர். இதற்கான அளவீடு செய்யும் பணி கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கியது. தொடர்ந்து, 216 அடி உயர கருவறை கோபுரம், பெரியநாயகி சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள், ராஜராஜன் வாயில் கோபுரம், கேரளாந்தகன் வாயில் கோபுரம், மராட்டி வாயில், திருச்சுற்றுமாளிகை உள்ளிட்டவற்றில் நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த விளக்குகள் எரிய விடப்பட்டு சோதனை செய்யப்பட்டன.இந்நிலையில், மகா சிவராத்தி அன்று இரவு கோவில் முழுவதும் இந்த விளக்குகள் எரியவிடப்பட்டன.இதனால், கோவில் தங்கம் போன்று ஜொலித்தது. இதை பலரும் கண்டு களித்தனர். இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் அலுவலர்கள் கூறுகையில், தற்போது சோதனை அடிப்படையில் எரிய விடப்பட்டு வருகிறது. விரைவில் கோவில் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்குகள் எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar