Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி கோவில் பணம் ரூ.6 கோடி ... சேலத்தில் ராமானுஜர் மணி மண்டபம் அடிக்கல் நாட்டு விழா! சேலத்தில் ராமானுஜர் மணி மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படை வீட்டம்மன் கோவில் தேர் சீரமைக்கும் பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
10:06

பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன்கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் விடுவதற்காக பணி தீவிரமாக நடந்து வருகிறது.பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் செடல் உற்சவம் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை நடக்கும். 50 ஆண்டுகால பழமைவாய்ந்த திருத்தேர் மழை, வெயிலில் நனைந்து பாகங்கள் வீணானதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருத்தேர் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு திருத்தேர் புதுப்பிக்க அறநிலையத் துறை சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து 5 லட்சமும், உபயதாரர்கள் மூலம் 10 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்தனர். தேர் பணியை துவக்கிய போது ஏற்கனவே இருந்த தேர்பாகங்கள் முற்றிலும் அரித்து வீணானது. இதனால் புதிய திருத்தேர் 35 லட்சம் மதிப்பீட்டில் செய்ய முடிவு செய்து 3 ஆண்டுகளாக அரசு மற்றும் உபயதாரர்கள் உதவியுடன் இலுப்ப மரத்தின் மூலம் ஒவ்வொரு பாகங்கள் ஒப்பந்தாரர் ராஜாமணி ஸ்தபதி தலைமையில் தொழிலாளர்கள் தேர்பகுதியில் சுவாமியின் பாகங்கள் வடிவமைத்தனர். தற்போது தேர் பாகங்கள் ஒவ்வொன்றும் பொருத்தி தேரை பூட்டும் பணி யில் தொழிலாளர்கள் சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜலந்திரன் கூறுகையில், வரும் ஆவணி மாதம் 2ம் வெள்ளிக்கிழமை கோவில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் திருத்தேர் பணியை முடித்து வெள்ளோட்டம் விட ஏற்பாடு செய்துள்ளோம். அன்று நடக்கும் செடல் உற்சவத்தில் திருத்தேர் புறப்பாடு நடக்கும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar