Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதி கோவிலில் துணை ... ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால மூத்ததேவி கல்வெட்டு விழுப்புரம் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பல்லவர் கால மூத்ததேவி கல்வெட்டு விழுப்புரம் அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
11:06

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பல்லவர் கால மூத்ததேவி மற்றும் சோழர் கால துாம்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தில் நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு புதைந்திருந்த பலகைக் கல்லின், ஒரு பக்கத்தில் மூத்ததேவி சிற்பமும், இன்னொரு பக்கத்தில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இது குறித்து செங்குட்டுவன் கூறியதாவது:5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் மூத்ததேவியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இதன் காலம் கி.பி., 8ம் நுாற்றாண்டு ஆகும். பல்லவர் காலத்தில் மூத்ததேவி வழிபாடு சிறப்புற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.பலகைக் கல்லின் இன்னொரு பக்கத்தில் 17 வரியிலான கல்வெட்டு வாசகம் இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி., 1216 ஆண்டு ஆகும். இப்பகுதியில் ஏரி துாம்பு வைத்தவர் குறித்தும் இதனை நிறைவேற்றிய அதிகாரி குறித்தும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 12, 13 ம் நுாற்றாண்டில் சேட்டை மூத்ததேவியின் வழிபாடு இல்லாததால் அந்த சிற்பம் உள்ள பலகைக் கல்லை உடைத்து ஒரு பகுதியின் பின்புறம் இக்கல்வெட்டினை பொறித்துள்ளனர். இக்கல்லில் மூத்த தேவி சிற்பம் பொறிக்கப்பட்டு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லின் இன்னொரு பக்கத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar