Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்கள் பாதுகாப்பு: பிராமணர் ... கோயில் வாசல்களில் திருமணம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15ம் நுாற்றாண்டு சூல கற்கள் உத்திரமேரூரில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
05:06

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில், சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும், 15ம் நுாற்றாண்டை சார்ந்த அரிய வகை சூலக்கல்லை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர்,நேற்று கண்டெடுத்தனர்.

இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது: உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனம் - மருதம் சாலையில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட, இரு சூல கற்களை கண்டெடுத்தோம்.இதில், 50 செ.மீ., அகலம், 75 செ.மீ., உயரமும் உடைய ஒரு கல்லும், அதன் அருகில், 35 செ.மீ., அகலம், 70 செ.மீ., உயரமும் உடைய மற்றொரு கல்லும் உள்ளது. இந்த கல்லின் இடதுபக்கம் சூலச் சின்னமும், அதன்கீழ் பன்றி உருவமும் உள்ளது. விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்தவை.மன்னர்கள் காலத்தில், சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு, அதன் எல்லையை குறிக்க, நான்கு திசைகளில் சூலச்சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பர். இதற்கு, சூலக்கற்கள் என, பெயர்.

இந்நிலங்களுக்கு வரியை நீக்கி, இறையிலி நிலங்களாக கோவிலுக்கு மன்னர்கள் வழங்கினர். இது, கோவில் நிதி வருவாய்க்கான ஏற்பாடாக இருந்தது. இதன் வருவாயில், அன்றாட பூஜைகள் உள்ளிட்ட கோவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இவ்வூரில், பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிவாலயம் திருப்புலிவனமுடைய நாயனார் எனும் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. எனவே, இந்த கோவிலுக்கு கொடுத்த நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூல கற்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வூர் மக்கள் இதை, இன்றும், எல்லைக்கல் என்றே அழைக்கின்றனர்.தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட சூலக்கற்களில், கழுதை மற்றும் நாயின் உருவம் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இதில் இடம்பெற்றிருப்பது அரியதாக உள்ளது.கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இவ்வகை அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar