Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தற்காலிக கோவில் பணியாளர்கள் ... மடப்புரம் கோயில் திறக்க கோரிக்கை மடப்புரம் கோயில் திறக்க கோரிக்கை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதைந்து வரும் கல்மண்டபங்கள்: பாதுகாக்க தவறும் அதிகாரிகள்
எழுத்தின் அளவு:
சிதைந்து வரும் கல்மண்டபங்கள்: பாதுகாக்க தவறும் அதிகாரிகள்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
09:06

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் பல்வேறு இடங்களில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கல் மண்டபங்கள் சிதைந்தும், புதர் மண்டியும் விழுந்துவிடும் சூழலிலும் காணப்படுகிறது இதனை பாதுகாப்பதில் அரசுத்துறை அதிகாரிகள் பாராமுகம் காட்டுகின்றனர்.

மன்னர்கள் காலத்தில் இங்குள்ள மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நடந்து வரும் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கும், இக்கோயில்களில் பூஜை நேரத்தில் மணி அடித்த உடன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்று என கட்டப்பட்டுள்ள கல் மண்டபங்ளில் மணியடித்து மன்னர்கள் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பெருமைக்குரியவை. இத்தகைய கல் மண்டபங்கள் இன்று அரசு துறையின் பாராமுகத்தால் சிதைந்து வருகிறது. பட்டத்தரசி அம்மன் கோவில், பூவாணி விலக்கு அருகேயுள்ள மண்டபங்களில் புதர்மண்டி கிடக்கிறது. மேற்கூரைகள் இடிந்து எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் காணப்படுகிறது. ஒரு சில மண்டபங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் குடிமகன்களின் மதுக்கூடமாக உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்: மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கல் மண்டபங்களை தற்போது எந்த அரசுத் துறையும் கண்டுகொள்வதில்லை. இதனால் தனிநபர்கள், குடிமகன்கள், சமூகவிரோதிகள் ஆக்கிரமித்து தங்குமிடமாக மாற்றி வருகின்றனர். இவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சரவணதுரை, பாரதிய ஜனதா நிர்வாகி.

காப்பாற்ற வேண்டும்: இங்குள்ள கல் மண்டபங்கள் மிகவும் புராதன மிக்கவை. கலைநயம் கொண்டவை. இதனைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே, அரசு நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சிதைந்து வரும் கல் மண்டபங்களை சீரமைத்து காப்பாற்ற வேண்டும். - சமுத்திரம், ஒருங்கிணைப்பாளர், ஈஷா யோகா.

கட்ட முடியாது: அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் கட்டப்பட்ட இது போன்ற கல் மண்டபங்களை இன்றைய காலத்தில் கட்ட முடியாது. பல வருடங்களாக சிதைந்து வரும் கல் மண்டபங்களை அரசு நிர்வாகம் பாதுகாக்க வேண்டும். - சரவணன், சதுரகிரி பக்தர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar