திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்) விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் , ஆனி பிரமோற்சவ(தட்சிணாயன புண்ணிய காலம்) விழா, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளம் முழங்க, இன்று காலை 6 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்தின் முன் எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி பத்கர்கள் தரிசனம் செய்தனர்.