சிதம்பரம்:கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சனதரிசன விழா ந பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 7:30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் கனகசபை தீட்சிதர் ரிஷபக் கொடியேற்றினார்.தினமும் சுவாமி வீதியுலா நடக்கும். ஜூலை 10ம் தேதி தெருவடைச்சான் வீதியுலா 12ம் தேதி தங்க கலச வாகன வீதியுலா 13ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடக்கிறது.ஜூலை 14ம் தேதி தேர் திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளசெய்து லட்சார்ச்சனை நடக்கும் .
தொடர்ந்து 15ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன நாளன்று காலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி மகா அபிஷேகம் காலை 10:00 மணிக்கு பஞ்சமூர்த்தி உள்பிரகாரத்தில் உலா வந்த பின் ஆனித் திருமஞ்சன தரிசனம் நடக்கிறது. இன்று முதல் 13ம் தேதி வரை காலை 7:00 முதல் 10:00 மணி வரையும் மாலை 5:00 - 8:00 மணி வரையும் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தேர் திருவிழாவான 14ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜரை தரிசிக்கலாம்.மேலும் 15ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசனம்முடிந்த பிறகு மாலை பொதுமக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.