Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குட்டைத்திடல் கோவிலில் ... திருப்பரங்குன்றம் காசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
4 உலோக சிலைகள் புதுச்சேரியில் பறிமுதல்
எழுத்தின் அளவு:
4 உலோக சிலைகள் புதுச்சேரியில் பறிமுதல்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
04:07

 புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி ஊழியர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு உலோக சிலைகளை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, வாழைக்குளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 47; புதுச்சேரி நகராட்சி அலுவலக காவலாளி. இவரது வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., கதிரவன் தலைமையிலான குழுவினர், நேற்று சுரேஷ் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, உலோகத்தால் செய்யப்பட்ட 3.5 அடி மற்றும் 2 அடி உயர நடராஜர், 3 அடி மற்றும் 1.5 அடி உயரத்தில் அம்பாள் என நான்கு சிலைகளை பறிமுதல் செய்தனர்.

சுரேஷ் குடும்பத்தினர், இவை பித்தளை சிலைகள்; காசியில் இருந்து வாங்கியதற்கான ரசீது உள்ளது எனக் கூறி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டு போலீசாரின் வாகனத்தை மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலைகளை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் தலைமையிலான போலீசார் தனிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்பகுதியில் நின்றவர்களை விசாரித்ததில் குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 8ம் தேதி 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நான்கு உலோக சிலைகளை திருடி கண்மாய்க்குள் புதைத்து வைத்தது தெரிந்தது. சேதப்படுத்திய 3 மற்றும் 1 அடி நடராஜர் சிலைகள், 2.5 அடி சிவகாமி, 1 அடி மாணிக்கவாசகர் சிலைகள் மீட்கப்பட்டன. 19 - 29 வயதுள்ள ஆறு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண ... மேலும்
 
temple news
திருவொற்றியூர் ; திருவொற்றியூரில் அமைந்துள்ள  ஓம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் 501 பெண்கள் பால் குடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar