Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதை செய்வோம் பொறுமை கடலினும் பெரிது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பதறாத காரியம் சிதறாது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
03:07


காட்டில் ஒரு இளைஞன் நடந்து சென்றான். அவனுக்குப் பசித்தது. மரம் ஒன்றில் பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி பறிக்க முயன்ற போது, அவனது பாரம் தாங்காமல் கிளை முறிந்தது.
சட்டென சுதாரித்த அவன் கீழிருந்த ஒரு கிளையைப் பிடித்து தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தான்.
நல்ல உயரத்தில் இருப்பது புரிந்தது. கண்களை மூடியபடி, ‘‘ஆண்டவரே.. என்னை காப்பாற்று ’’ என அலறினான். அப்போது முதியவர் ஒருவர் அங்கு வந்தார்.
‘‘பெரியவரே என்னை காப்பாற்றுங்கள்’’ என்றான்.
இளைஞன் மீது சிறுகல்லை வீசினார். கல் பட்டதும் வலியால் துடித்தவன் கீழே பார்த்தான்.
‘‘பெரியவரே, உதவிக்கு அழைத்தால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு’’  எனக் கேட்டான்.
மீண்டும் ஒரு கல்லை வீசினார். ‘‘நான் கீழே வந்தால் உங்களை சும்மா விட மாட்டேன்’’ என எச்சரித்தான்.
பெரியவர் மீண்டும் ஒரு கல்லை வீசினார். இளைஞனுக்கு கோபம் தலைக்கேறியது. விடாமுயற்சியால் தன்னால் முடியும் என்று மெதுவாக கீழே இறங்கி வந்தான்.  
‘‘ உதவி தானே கேட்டேன்; கல்லெறிந்து உபத்திரவம் செய்கிறீரே’’ என்றான்.
‘‘தம்பி... நான் உனக்கு உதவி தான் செய்தேன்’’ சிரித்தபடி கூறினார். இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘‘நான் உன்னை பார்த்த போது பயத்தில் உறைந்து போயிருந்தாய். உன் மூளை அப்போது வேலை செய்யவில்லை.  கல்லை விட்டு எறிந்ததும் பதட்டம் விலகியதுடன், என் மீதிருந்த கோபத்தால் யோசிக்க ஆரம்பித்தாய். அதன் பின் நீயாகவே முயற்சியில் இறங்கினாய். வெற்றியும் பெற்று விட்டாய். பயத்தை போக்கவே, உன் மீது கல்லெறிந்து திசை திருப்பினேன்’’ எனச் சொல்லி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மறைந்தார் முதியவர்.  
எந்த செயலிலும் பதட்டத்துடன் ஈடுபடக்கூடாது. மீறி பதட்டம் அடைந்தால் மூளை வேளை செய்யாது. அதனால்தான் பதறாத காரியம் சிதறாது என்பார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar