Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்... நல்லகாலம் பிறக்குது...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாறியது மனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
05:08


திருப்பூர் கிருஷ்ணன்
.................
திருச்சிராப்பள்ளியில் முனிசிபல் சேர்மனாக இருந்தவர் நடேச ஐயர். அவருக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் மாற்று மதத்தில் சேர முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இளைஞரை எப்படி திருத்துவது என வருந்திய நடேச ஐயர், ‘‘ஒருமுறை காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க செல்வாம். பிறகு உன் விருப்பம் போல செய்’’ எனத் தெரிவித்தார்.  இருவரும் காஞ்சி மடத்திற்குச் சென்றனர்.   
கூர்ந்து பார்த்த மகாபெரியவர்,  இளைஞரின் மனச்சலனத்தை உணர்ந்து, ‘என்ன பிரச்னை’ எனக் கேட்டார்.    
மாற்று மதத்தில் சேர இருப்பதாக தெரிவித்தார் இளைஞர்.
‘‘ஏன் இந்த முடிவுக்கு வந்தாய்’’ எனக் கேட்டார் மகாபெரியவர்.
மாற்று மதம் பற்றி தான் அறிந்ததை பெருமையாக சொல்லத் தொடங்கினார்.  சிரித்தபடியே மகாபெரியவர், ‘நீ சொன்ன அத்தனையும் நம் மதத்திலும் இருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி, ‘நாளை வா! உன்னிடம் இன்னும் பேச வேண்டும்’ என அனுப்பி வைத்தார்.  
மகாபெரியவரின் தவஆற்றலும், கனிவான வார்த்தைகளாலும் ஈர்க்கப்பட்ட இளைஞர் மூன்று நாட்கள் தொடர்ந்து மடத்திற்கு வந்தார்.
உருவ வழிபாடு பிடிக்கவில்லை என்றால் அருவ வழிபாட்டிற்கும் நம் மதத்தில் வழியிருக்கிறது. எல்லா மதங்களுக்கும் தாய் போன்றது நம் ஹிந்து மதம். அவரவர் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் கடவுளை நாம் வழிபடலாம் என்பதை விவரித்தார்.
 கடவுளை அடையவே உலகிலுள்ள எல்லா மதங்களும் வழிகாட்டுகின்றன. ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறாரோ, அதிலேயே தொடர்ந்து இருப்பது தான் சரியானது. மதம் மாற்றம் என்பது முந்தைய மதத்தைத் தாழ்வானது எனக் கருதுவதால்தான் நிகழ்கிறது. அப்படி ஒரு மதத்தைத் தாழ்வாக நினைப்பது தவறு. தம்மிடம் வரும் மாற்று மதத்தினரிடம் அவரவர் மதநெறிப்படி வாழும்படி தாம் அறிவுரை கூறுவதையும் தெரிவித்தார்.
 ‘ஹிந்துவாக பிறந்திருப்பதே பெருமையான விஷயம்’ என்ற உண்மையை உணர்ந்தார் இளைஞர். மதம் மாறும் எண்ணத்தைக் கைவிட்டார்.  நடேச ஐயர் மனநிறைவுடன் காஞ்சி மகாபெரியவருக்கு நன்றி தெரிவித்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar