Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கோவில்களில் ஆடி அமாவாசை ... சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
02:08

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில், கடந்த 6ம் தேதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.இருப்பினும், ஆடி மாத அமாவாசையான நேற்று வழக்கமாக நடக்கும் ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் இல்லாமல் நடந்தது. அதிகாலை 4:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணி முதல், 8:00 மணிவரை, கோவில் வளாகத்தில் சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஊஞ்சலில் அமர்த்தி கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar