Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு ... நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள் ஜெயந்தி விழா நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறில் சுந்தரர் ஆராதனை, ஐக்கிய திருநாள்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறில் சுந்தரர் ஆராதனை, ஐக்கிய திருநாள்

பதிவு செய்த நாள்

14 ஆக
2021
10:08

அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பாக, திருநள்ளாறில் ஸ்ரீ சுந்தரர் ஆராதனை, ஐக்கிய திருநாள் குரு பூஜை, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாக்கள் நடந்தன.

கடவுளை அறியவும், கடவுளின் திருவருளைப் பெறவும் வழி காட்டுபவர்கள் குருமார்கள். நமக்கு வழிகாட்டியாய் இருப்பவர்கள் 63 நாயன்மார்கள். அவர்களில், ஈசனுக்கே தோழராக இருந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவரது அழகை கண்டு, சிவபெருமானே சுந்தரர் என அழைத்தமையால் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறார். இவரது பக்தி, சக மார்க்கம் எனும் தோழமை வழியை சார்ந்தது. ஆதிசைவ குல தோன்றலான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் குரு பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை, புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு சன்னிதி தெரு ஸ்ரீ இந்திர நிவாசில் நடந்தது.அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க புதுச்சேரி மாநில துணைத் தலைவர் திருஞான சம்பந்தம் துவக்கி வைத்தார். மாநில இணைச் செயலர் சக்தி மணிகண்டன், குரு வந்தனம் செய்தார். தங்கப்பா சிவாச்சாரியார், ரமேஷ் ஆகியோர் சுந்தரர் அஷ்டோத்திர சத அர்ச்சனை செய்தனர்.

உலக நன்மை வேண்டி, லட்ச ஆவர்த்தி பாசுபதாஸ்திர ஹோமம் நடத்தப்பட்டது. அகில இந்திய துணைத் தலைவர் சேலம் சிவ சங்கர சர்மாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, அகில இந்திய துணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் வழங்கி, தேவார பதிக கூட்டு வழிபாட்டை நடத்தினார்.மகா தீபாராதனை அருட் பிரசாதத்தை வைத்தியநாத சிவாச்சாரியார் வழங்கினார். ராஜா சுப்பிரமணிய சிவம் நன்றி கூறினார். பிற மாவட்ட, மாநில சங்க பொறுப்பாளர்கள் காணொலி வாயிலாக பிரார்த்தனையில் பங்கேற்றனர்.- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar