Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயண ராமர் கோவிலில் மண்டாலபிஷேகம் மேல்மலையனூரில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து மேல்மலையனூரில் நாளை முதல் 4 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 ஆண்டு பழமையான நந்தி சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,000 ஆண்டு பழமையான நந்தி சிலை கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

02 செப்
2021
09:09

நாமக்கல்: மோகனுார் அருகே கோவில் புனரமைப்பு பணியின்போது, 1,000 ஆண்டு பழமையான பாண்டிய மன்னர் காலத்து நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே ஆரியூரில், 1,000 ஆண்டுக்கு முற்பட்ட மன்னர் காலத்தில் கட்டப்பட்ட  பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. அருகேயுள்ள செல்லாண்டியம்மன் கோவில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் அமைப்பதற்காக கோவில் முன்புறம் பள்ளம் தோண்டினர். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் பழமையான நந்தி சிலை சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, தோப்பூரைச்  சேர்ந்த டாக்டர் சந்திரன் கூறியதாவது: பாண்டிய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதால்,  பாண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களுக்கு பின், 500 ஆண்டுகளுக்கு முன், முகலாய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
குறிப்பாக மாலிக்காபூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்து கோவில்களையும், அதில் உள்ள சிலைகளையும் சேதப்படுத்தியதுடன், அவற்றை அழித்து அப்புறப்படுத்தி இருக்கலாம் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், இந்த கோவில் வளாகத்தில், வெள்ளைக் கற்களால் ஆன விநாயகர் சிலையும், பெரிய நந்தி சிலையும் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. அவற்றை, ஆராய்ச்சிக்காக, சேலம் தொல்லியல் துறையினர் எடுத்து சென்று, சேலம் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். தற்போது கிடைத்த இந்த சிலையும், சேதமடைந்து இருப்பதால், இதுவும் பாண்டீஸ்வரர் கோவில் சிலையாக இருக்கும் என நம்பப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்வதன் மூலம் கோவில் வரலாறு, எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவரும் என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar