Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்திய பூஜைக்கே திண்டாடும் ... மேல்மலையனுார் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் வசூல் மேல்மலையனுார் கோவிலில் ரூ.31 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

பதிவு செய்த நாள்

03 செப்
2021
11:09

பழநி: பழநியில் கடந்த 2019 டிச.,2 மலைக்கோயில் பாலாலயம் நடத்தப்பட்டு கும்பாபிஷேகப் பணிகள் துவங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது, "கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது என்பது ஆகம விதி. ஹிந்து அறநிலையத்துறை கீழ் உள்ள முக்கியமான கோயில்களில் ஆகம விதிகள் மீறுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 2006 இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்ஆட்சியில் பாலாலயம் செய்யப்பட்டு 26 நாட்களில் கும்பாபிஷேக பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. பாலாலயம் கடந்த 2019 டிசம்பரில் யாக பூஜையுடன் நடைபெற்றது. அதன்பின் ஆறு அல்லது ஒன்பது மாதங்களுக்குள் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது வரை கும்பாபிஷேக பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவடைய நிலையில் உள்ளது. தமிழக அரசும் ஹிந்து அறநிலையத் துறையும் பழநி மலைக் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த தயங்குகிறது. அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பழநி மலை கோயில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும் அப்படி நடந்திருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப் பெருமான் அரசாட்சிக்கு உதவி புரிவார். கும்பாபிஷேக தாமதத்தால் உலக நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய அரசு விரைவில் கும்பாபிஷேகப் பணிகளை முடித்து பழநி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொள்கிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar