Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமவார அமாவாசை: நாகலிங்கத்தை ... கன்னிமார் கோயிலில் ஆவணி அமாவாசை சிறப்பு வழிபாடு கன்னிமார் கோயிலில் ஆவணி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் இலவச மொட்டை பயனற்றது: காமாட்சிபுரி ஆதீனம் கருத்து
எழுத்தின் அளவு:
கோவில்களில் இலவச மொட்டை பயனற்றது: காமாட்சிபுரி ஆதீனம் கருத்து

பதிவு செய்த நாள்

06 செப்
2021
02:09

பல்லடம்: தமிழக அரசின் இலவச மொட்டை அறிவிப்பு பயனற்றது என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. காணிக்கை இல்லாமல் மொட்டை அடிப்பது என்பது, பயனற்ற செயலாகும் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பக்தர்கள் பயன் அடைவதற்கு எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. அதை தவிர்த்து, கோவில்களின் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு பயனில்லாதது. நம் முன்னோர்கள் காலம் முதல், காது குத்துதல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளும் காணிக்கை வழங்கிய பின்பே நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உள்ள தமிழகத்தில், மொட்டை அடிக்க காணிக்கை இல்லை என்பதை ஏற்க இயலாது. யாரும் கேட்காவிட்டாலும், பக்தர்கள் இது போன்ற சடங்குகளுக்கு காணிக்கை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு மாற்றாக, அனைத்து கோவில்களிலும் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்து, இலவச தரிசனத்தை கொண்டு வர வேண்டும் என்றார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு நடந்த மகா மிருத்தியுஞ்ஜய ஹோமத்தை நடத்திக் கொடுத்தார். தொடர்ந்து, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar