Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலூர் வட்டாரத்தில், 50 விநாயகர் ... கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி, ஞாயிறுகளில் கோவில்கள் மூடல்; தட்சிண கன்னடாவில் புதிய விதிமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2021
03:09

மங்களூரு : கொரோனா அதிகரிக்கும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தட்சிண கன்னடாவில், தொற்று கட்டுக்குள் வராததால், இம்மாவட்டத்தில் விதிமுறைகளை கடுமையாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தட்சிண கன்னடாவில் கொரோனா தொற்று அதிகரிக்க, கேரளாவிலிருந்து வருவோரே காரணம்.எனவே, இம்மாநிலத்திலிருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் தொற்றை கட்டுப்படுத்த தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.இம்மாவட்டத்தில், பல்வேறு முக்கியமான புண்ணிய தலங்கள், கோவில்கள் உள்ளது. இங்கு மாநிலம், வெளி மாநிலங்களிலிருந்து, பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களுக்காக மாவட்ட நிர்வாகம், புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

தட்சிண கன்னடாவின் முக்கிய கோவில்கள் குக்கே சுப்ரமண்யா, கட்டீலு துர்கா பரமேஸ்வரி, தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவில்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும்.இக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, கடவுளை தரிசிக்க வாய்ப்பளிக்கப்படும்.முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி, கடவுள் தரிசனம், தீர்த்த பிரசாதம், அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். அடுத்த உத்தரவு வரும் வரை மற்ற சேவைகளுக்கு அனுமதியில்லை.

கோவில்களில் உள்ள, தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்க வாய்ப்பில்லை. வார இறுதி நாட்கள் சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்களுக்கு, கடவுளை தரிசிக்க அனுமதியில்லை. அர்ச்சகர்கள் சம்பிரதாய முறைப்படி, பூஜை செய்வர். கோவில்களில் உற்சவம், ஊர்வலம், திருவிழாக்கள் நடத்தக்கூடாது. இந்த உத்தரவை மீறினால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில், நிபா தொற்று பீதியும் உள்ளது. எனவே, தட்சிண கன்னட எல்லைப்பகுதியில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட அரசு வாய்ப்பளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar