Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... அம்பலவாணரிடம் மனமுருகினாலே திருமணம், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்! அம்பலவாணரிடம் மனமுருகினாலே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாத சுவாமி கோவிலில் அரசு - வேம்பு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
கைலாசநாத சுவாமி கோவிலில் அரசு - வேம்பு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

24 செப்
2021
03:09

மயிலாடுதுறை : சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாத சுவாமி கோவிலில் உலக நன்மை வேண்டி அரசு - வேம்பு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கல்யாணி அம்பிகா மேத கைலாசநாத சுவாமி ஆலையம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவகிரகங்கள் தனித்தனியே வீற்றிருப்பது தனி சிறப்பாகும். இக்கோவில் குளக்கரையில் அரசமர விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.இந்த அரச மரத்தோடு இணைந்து வேப்ப மரமும் வளர்ந்து பின்னி பினைந்து காட்சியளிக்கிறது. இன்று சங்கடாஹர சதூர்த்தியை முன்னிட்டு அரசமர விநாயகருக்கு சிறப்பு யாகங்கள் மற்றும் உலக  நன்மை வேண்டியும், திருமண தடை நீங்கவும், தொழில் விருத்தி வேண்டியும் கணபதி ஹோமம்,கணபதி அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து அரசு -  வேம்பு மரத்திற்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  முன்னதாக யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரானது  அரச- வேம்பு மரங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அரசமரத்திற்கு வேட்டியும் வேப்பமரத்தை பெண்ணாக பாவித்து சேலையும் மற்றும் மாங்கல்யம் அறிவிக்கப்பட்டு  திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 1008 கொழுக்கட்டை விநாயகருக்கு படையளிடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு இந்த திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர் .

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar