பதிவு செய்த நாள்
25
அக்
2021
12:10
திருச்செந்துார்: திருச்செந்துார் கோயிலில் பொது தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக காத்திருப்போர் அறை திறக்கப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.20, ரூ.100, ரூ.250 ஆகிய சிறப்பு தரிசன வரிசைகள் நடை முறையில் உள்ளன. தற்போது யிலுக்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இதனால் வரிசையில் பல மணிநேரம் கால் கடுக்க காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. இதனால் முதியோர், பெண்கள் மிகவும் சிரமமடைந்து வந்தனர். இதனை தவிர்க்கும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் கலையரங்கம் எதிரே ராஜகோபுரம் அருகில் உள்ள காவடி மண்டபத்தை 3 பகுதிகளாக பிரித்து அதில் 408 இருக்கைகள், 6 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்களை அமர வைத்து, ஒவ்வொரு பகுதியாக தரிசனத்திற்கு அனுப்பப்படவுள்ளனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்றும், கூட்ட நெரிசலில் அவதியடைவதும் தவிர்க்கப்படுகிறது . இந்த வசதியை இணை ஆணையர் (பொ) அன்புமணி இனிப்பு வழங்கி துவக்கி வைத்தார்.