மயிலம், " மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை உற்சவம் நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பகல் 12:00 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலைவலக் காட்சி நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.