அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே அய்யூரில் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு கொடிமர திருவிழா நடந்தது.தர்ஹாவிற்கு சொந்தமான சந்தனக்கூடு கொடிமரம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவோரின் கொடிமரங்கள் பள்ளிவாசலுக்கு வரவழைக்கப்பட்டன.சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் கொடி மரங்கள் அலங்கரிக்கப்பட்டன. பின் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது. ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் செய்தனர்.