Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையான் கோயிலில் ... கந்தசஷ்டி விழா முருகன் கோயில்களில் கோலாகலம் கந்தசஷ்டி விழா முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி சங்கரர் சிலை பிரதிஷ்டைக்கு சிருங்கேரி பீடம் சிறப்பு பிரசாதம்
எழுத்தின் அளவு:
ஆதி சங்கரர் சிலை பிரதிஷ்டைக்கு சிருங்கேரி பீடம் சிறப்பு பிரசாதம்

பதிவு செய்த நாள்

06 நவ
2021
08:11

 கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டைக்கு, சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் சார்பில், தங்க ருத்ராட்ச மாலை மற்றும் பிரதமருக்கான சிறப்பு பிரசாதம், ஆசிர்வாத கடிதம் வழங்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை முன்னிட்டு, அவர் ஸ்தாபித்த நான்கு மடங்களான துவாரகா, புரி, பதரி, சிருங்கேரி மடங்களில் இருந்து பிரதிநிதிக அனுப்ப, உத்தரகாண்ட் சார்தாம் வாரியம் அழைப்பு விடுத்தது. இதன்படி, சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில், பண்டிட் சிவகுமார் சர்மா சென்று, ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானத்தின் ஆசீர்வாத கடிதத்தை வழங்கினார். மேலும், புதிய சிலைக்கு அணிவிக்க, 1,000 தங்க ருத்ராட்சங்கள் அடங்கிய மாலை மற்றும் பிரதமருக்கான சிறப்பு பிரசாதத்தை சமர்ப்பித்தார். ஆசிர்வாத கடிதத்தில், ஸ்ரீ சங்கரர் ஒரு மனிதனின், ஒரு சமூகத்தின் நன்மைக்காக வாழ்ந்தவரல்ல. முழு மனித குலத்துக்கும் நன்மை ஏற்பட, அனைவருக்கும் நல்வழியை உபதேசித்தார்.

தன் 32வது வயதில், பனி மூடிய கேதார மலையில், அவதார காரியங்களை நிறைவேற்றிய திருப்தியுடன் பகவானோடு, சங்கரர் ஐக்கியம் ஆனார். தேசம் முழுதும் யாத்திரை செய்து கணக்கற்ற மக்களை சந்தித்து, வேதம் கூறும் உண்மையின் அறிவை வெளிப்படுத்தினார். அவர் கடைசியாக சிஷ்யர்களுக்கு தரிசனம் கொடுத்த கேதாரநாத்தில், ஆதிசங்கரரின் அழகான உருவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவியுள்ளது, சங்கரர் செய்த பேருதவிக்கு செய்த நன்றிக்கடனாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார். ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் மற்றும் ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சார்பில், ஆதிசங்கரரின் வெள்ளி சிலைக்கு பட்டு, பூஜை, தீபாராதனை பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கர்நாடகா வேளாண் துறை அமைச்சர் ஷோபா, பா.ஜ., தேசிய செயலர் ரவி, எம்.எல்.ஏ., பிரானேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., ஜீவராஜ் கலந்து கொண்டனர். சிருங்கேரி மடத்தின் முதன்மை அதிகாரி கவுரிசங்கர் ஏற்பாடுகளை செய்திருந்தார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar