திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நாளை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2021 04:11
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவை முன்னிட்டு நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கொரோனா கட்டுப்பாடு விதிகளால் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் சூரசம்ஹாரம் நடைபெறவில்லை. தினசரி மாலை 6:30 மணி அளவில் மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் மட்டும் நடந்தது. விழாவில் உற்ஸவர் எழுந்தருளல் இல்லாததால் சம்பிரதாயமாக மூலவருக்கு நாளை திருக்கல்யாணம் நடைபெறும். மூலவர் சன்னதியில் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.