Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் ஹலால் சர்க்கரையா? ... சபரிமலையில் கார்த்திகை தீபம்: கற்பூர ஒளியில் ஜொலித்த சன்னிதானம் சபரிமலையில் கார்த்திகை தீபம்: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் பத்தனம் திட்டையில் தங்கலாம்
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் பக்தர்கள் பத்தனம் திட்டையில் தங்கலாம்

பதிவு செய்த நாள்

19 நவ
2021
07:11

சபரிமலை:சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் புது திட்டத்தை செயல்படுத்துகிறது. பத்தனம்திட்டை வழியாக வரும் பக்தர்கள் நான்கு மணி நேரம் அங்கு தங்கி விட்டு அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுககான புது திட்டத்தை, அந்த மாநில போக்குரவத்து கழகம் அறிவித்துள்ளது. இதன்படி கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் தென்காசி, செங்கோட்டை போன்ற இடங்களில் இருந்தும் பம்பைக்கு இயக்கப்படும் கேரள அரசு பஸ்கள் பத்தனம்திட்டை வரை மட்டுமே இயக்கப்படும்.
பக்தர்கள் பம்பைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும். ஆனால் பத்தனம்திட்டையில் இறங்கி ஓய்வு எடுக்கலாம். ஓட்டல்களில் சென்று உணவு சாப்பிடலாம். நான்கு மணி நேரத்திற்குள் பத்தனம்திட்டையில் இருந்து பம்பைக்கு செல்லும் செயின் சர்வீஸ் பஸ்சில் ஏறி பம்பை செல்லலாம்.பத்தனம்திட்டையில் இருந்து புறப்படும் பஸ் ஓட்டல்களில் நிற்காது.

5 நிமிடத்துக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும். இதற்காக 50 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நவ., 22 சோதனை ஓட்டம் நடத்தப்படும்.பத்தனம்திட்டை நகராட்சியுடன் இணைந்து கழிவறை உள்ளிட்ட வசதிகளும், குடும்பஸ்ரீ அமைப்புடன் சேர்ந்து ஓட்டல்களும் திறக்கப்பட உள்ளன. நிலக்கல் மற்றும் பம்பையில் ஓட்டல்கள் குறைந்ததால் பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமம் இதன் மூலம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பம்பையில் பார்க்கிங் அனுமதி இல்லை: கேரளாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பம்பை உருக்குலைந்தது. அதன் பின் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் பம்பையில் பார்க்கிங் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.இந்த ஆண்டும் அது தொடர்கிறது. டிரைவருடன் வரும் வாகனங்கள் பம்பை வந்து பக்தர்களை இறக்கி விட்டு நிலக்கல் சென்று பார்க்கிங் செய்ய வேண்டும். அதே நேரத்தில் டிரைவரும் சன்னிதானம் செல்வதாக இருந்தால் நிலக்கல்லில் வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு பஸ்சில் பம்பை செல்ல வேண்டும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar