Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் கார்த்திகை தீபம்: ... பெருமழை ; சபரிமலையில் பக்தர்களுக்கு தடை பெருமழை ; சபரிமலையில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பம்பையில் ரூ. 250செலுத்தினால் பக்தர்கள் இருமுடி கட்டுவதற்கு வசதி
எழுத்தின் அளவு:
பம்பையில் ரூ. 250செலுத்தினால் பக்தர்கள் இருமுடி கட்டுவதற்கு வசதி

பதிவு செய்த நாள்

20 நவ
2021
02:11

சபரிமலை:பம்பை தேவசம் கவுன்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றால், இருமுடி கட்டு கட்டி கொடுக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சபரிசலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்காக, பம்பை கணபதி கோவிலில் தேவசம் போர்டு சிறப்பு வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, பம்பை தேவசம்போர்டு கவுன்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றவர்களுக்கு, பம்பை கணபதி கோவில் மேல்சாந்தி அல்லது அவரது உதவி பூஜாரிகள் கட்டு கட்டி கொடுத்து, தலைமேல் ஏற்றி அனுப்புவர். ஒரு இருமுடியில், ஒரு நெய் நிறைத்த தேங்காய், மஞ்சள், பொரி, அவல், சர்க்கரை, முந்திரி என 17 வகை பொருட்கள் இருக்கும். கூடுதல் நெய் தேங்காய் விரும்பும் பக்தர்கள் ஒரு தேங்காய்க்கு 80 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இருமுடிக்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் பக்தர்கள் 150 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதிகாலை 2:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

நடை அடைத்தால்:
இதற்கிடையே இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு விட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில், பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து நிலக்கல் சென்று விட வேண்டுமென சன்னிதான போலீஸ் தனி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இங்கு பக்தர்கள் தங்க அறைகள் அனுமதிக்கப்படாத நிலையிலும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மேலும், மழை காரணமாக தடை செய்யப்பட்டிருந்த சபரிமலை பாதை சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar