Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பில்லாத திருவாடானை கோயில்: ... சங்கரராமேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் சங்கரராமேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கி.பி., 17ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கி.பி., 17ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

06 டிச
2021
01:12

ஆண்டிபட்டி : கூடலுார் அருகே கி.பி., 17ம் நுாற்றாண்டு நடுகல்லை தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய செயலாளர் பஞ்சராஜா கண்டுபிடித்தார்.

அவர் கூறுகையில், சேர, பாண்டிய நாட்டை இணைக்கும் பெருவழிப்பாதையாக கூடலுார் இருந்துள்ளது. இங்கு கி.பி.1702ம் ஆண்டு பூஞ்ஞாயிறு மன்னர் ரவிவர்மாவுக்கும், மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளுக்கும் எல்லைப்போர் நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவை போற்றிய நடுகல்கள் கிடைத்து வருகின்றன. துப்பாக்கி ஏந்திய நிலையில் கிடைத்த அரிய நடுகல்லை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றார்.

இந்த நடுகல்லை ஆய்வு செய்த பின் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது:நடுகல் என்பது போர் அல்லது சாதாரண நிலையில் இறந்தவர்களின் நினைவாக எடுப்பது. இது நினைவு சின்னம் மட்டுமின்றி வரலாறு, சமூகம், பண்பாடு முதலியவற்றை உள்ளடக்கியது. பொதுவாக நடுகல்லில் வீரனின் கையில் வில், வாள், வேல் போன்ற போர்க்கருவிகள் காணப்படும். இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் இடது கையில் துப்பாக்கி ஏந்தி நிற்பதோடு, அருகே மனைவி ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டு பூச்செண்டுடன் அமர்ந்துள்ளார். இது புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இருவரது சிகை அலங்காரமும் பக்கவாட்டு கொண்டையுடன் நாயக்கர் கால பாணியை நினைவுபடுத்துவதாக உள்ளது. வீரனின் பாதம் வரையான ஆடை அலங்காரம், மனைவியின் ஆடை வடிவமைப்பு, நீள காதுகள் என சிற்பம் நேர்த்தியுடன் உள்ளது. துப்பாக்கியை பார்க்கும்போது போரில் வீரமரணமடைந்த நபரின் நினைவாகவும், கலை நயத்தின் அடிப்டையில் இது கி.பி.,17 ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல்லாகவும் இருக்கலாம். முன்காலத்திலேயே இங்கு துப்பாக்கி பயன்பாடு இருந்துள்ளதை குறிக்கும் நடுகல்லை மாவட்ட நிர்வாக அனுமதியுடன் ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar