Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழமாதேவி குலசேகர ஸ்வாமி கோவிலில் ... ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறங்காவலர் குழு விரைந்து அமைக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
04:12

பல்லடம்: கோவில்களில் அறங்காவலர் குழுவை விரைந்து அமைத்து, திருப்பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அறங்காவலர் குழுவின் கட்டுப்பாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, செயல் அலுவலர்களே அறங்காவலர்களின் பணிகளை கவனித்து வருகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், அறங்காவலர் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கோவில்களின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்வது வழக்கம். கோவில் வரவு செலவு கணக்கை பதிவிடுவது, தணிக்கை அதிகாரிகளுக்கு பதில் அளிப்பது, கோவில் நிதியை பராமரிப்பதுடன், உபரி நிதியை பயன்படுத்துவது குறித்தும் அறங்காவலர்களே தீர்மானிக்கின்றனர். இவ்வாறு, கோவிலின் முழு பொறுப்பை நிர்வகித்துவரும் அறங்காவலர்கள் குழு, கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்படவில்லை. அறங்காவலர் பணிகளை செயல் அலுவலர்களே செயல்படுத்தி வருகின்றனர். அரசு அலுவலர்களே, கோவிலின் முழு பொறுப்பையும் கவனிப்பது, மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். மேலும், தமிழகம் முழுவதும் எண்ணற்ற கோவில்களில், திருப்பணி நடைபெறாமல் உள்ளன. ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி, அறங்காவலர் குழு அமைக்கவும், கோவில் திருப்பணிகள் விரைந்து நடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் ஒரே இடத்தில்  12 பெருமாள் கருட சேவை வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் கண்ணை கவரும் வேலைபாடுகளுடன் கூடிய சல்லடம் எனும் ஆடை அணிந்து ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar