Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திருக்கைத்தல சேவை
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திருக்கைத்தல சேவை

பதிவு செய்த நாள்

20 டிச
2021
05:12

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கதநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் திருவத்யயன உற்சவத்தின் (வைகுந்த ஏகாதசி) இராப்பத்து ஏழாம் நாளான இன்று திருக்கைத்தல உற்சவம் நடைபெற உள்ளது.

அப்போது உற்சவர் ஸ்ரீ நம்பெருமாளை அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும் படி காட்டுவார்கள்.  அர்ச்சகர்களின் கைகளில் இருந்து உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் சேவை சாதிப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.

நாளை வேடுபறி உற்சவம் : வைகுந்த ஏகாதசியின் எட்டாம் திருநாளான நாளை (செவ்வாய் கிழமை); திருமங்கைமன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் நாளை பரமபதவாசல் திறப்பு கிடையாது. இந்த நிகழ்ச்சியொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் வையாளி வகையறா கண்டருள்கிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறுகிறது. இரவு 11.00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் ஸ்ரீநம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். வரும்  டிசம்பர் 23-ம் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி வைகுந்த ஏகாதசியின் மிக முக்கியமான நிகழ்ச்சியான நம்மாழ்வாhக்கு மோட்சம் தந்தருளும் வைபவமும் நடைபெற உள்ளது. பின் இயற்பா சாற்றுமுறையுடன்  வைகுந்த ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து, உதவி ஆணையர் திரு.கந்தசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar