Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் சிவன் கோயில்களில் ... திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம் திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை அம்பலத்தானுக்கு திருவாதிரை திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
தில்லை அம்பலத்தானுக்கு திருவாதிரை திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 டிச
2021
03:12

பல்லடம்: பல்லடம் வட்டார சிவன் கோவில்களில், தில்லை அம்பலத்தானுக்கு திருவாதிரை திருவிழா பக்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடந்தது.

பல்லடம் அடுத்த பல்லவராயன்பாளையத்தில் உள்ள பரமசிவன் கோவிலில், 19ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நடந்தது. பேரூர் அருள்நெறி மன்றத்தின் சார்பில் சாந்தலிங்கர் பங்கேற்று திருவாதிரை விழாவை நடத்திக் கொடுத்தார். காலை, 5.30 மணிக்கு வேள்வி வழிபாடுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பால், இளநீர், சந்தனம், பன்னீர், மஞ்சள், விபூதி, தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாணம், திருவீதி உலா, விநாயகரை வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்வுகளையடுத்து, சிறப்பு அலங்காரத்தில், தம்பதி சமேதராக நடராஜ பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ வழிபாட்டு குழு, காந்திஜி இளைஞர் நற்பணி மன்றம், சிவசக்தி கலைக்குழுவினர்‌ பிளவை ஒருங்கிணைத்தனர். செம்மிபாளையம், அனுப்பட்டி ஸ்ரீவேணுகான கிருஷ்ண பெருமாள் கோவில் பஜனைக் குழுவினர் பக்தி இசை பாடினர். அனைவருக்கும் விழாக் குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சுக்கம்பாளையம் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. 24 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, திருக்கல்யாண கோலத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுமண, மற்றும் மூத்த தம்பதிகள் பங்கேற்று நடராஜப் பெருமானை வழிபட்டனர். கயிலாய இசை முழக்கம் வாத்தியங்களுடன், அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பல்லடம் அருளானந்த ஈஸ்வரர், சித்தம்பலம் நவகிரக கோட்டை உள்ளிட்டவற்றிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar