Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் வட்டார சிவாலயங்களில் ஆருத்ரா ... தில்லை அம்பலத்தானுக்கு திருவாதிரை திருவிழா கோலாகலம் தில்லை அம்பலத்தானுக்கு திருவாதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

21 டிச
2021
02:12

 விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது.விருதுநகர் ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ நடராஜர் கோயில், ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயில்களில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது.

அருப்புக்கோட்டை: சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. கோ பூஜை,அபிஷேகம் நடந்தது. நடராஜர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். அருப்புக்கோட்டை அமுதலிங்க கேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம் செய்யப்பட்டது.ராஜபாளையம்: மாயூரநாதசுவாமி கோயிலில் தொடர்ந்து 9 நாட்களாக திருவெம்பாவை பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை அன்னதானம் நடந்தது.அதிகாலை 3:00 மணிக்கு பல்வேறு வகையான அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், கோ பூஜை, தாண்டவ தீபாராதனை நடந்தது. பஞ்ச வாத்தியங்கள் முன்செல்ல பக்தர்கள் படை சூழ சிவனடியார்களுடன் உற்ஸவர் புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம் வழங்கப்பட்டது. தக்கார் இளங்கோவன் செயல் அலுவலர் ஜவஹர் முன்னிலை வகித்தனர்.

தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் சேரை அம்பலத்தில் வைத்து அபிஷேகம் நடந்தது. நடராஜர் சிவகாமி அம்பாள் புறப்பாடு நடந்தது. மாலையில் தவம் பெற்ற நாயகிக்கு தைல காப்பு அபிஷேகம் எதிர்சேவை தீபாராதனை நடந்தது.*தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயிலில் பிரகாரத்திலுள்ள நடராஜர் திருமேனிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது ஸ்ரீவில்லிபுத்துார்: மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகளை ரகு பட்டர், ரமேஷ் பட்டர், ஆனந்த விஜய் பட்டர் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவஹர், கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். * வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவகாசி: சிவன் கோயில், முருகன் கோயில், கடைக் கோயிலில் திருவாதிரை திருவிழா கொண்டாடப்பட்டது. சிவன் கோயிலில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்திலே உலாவந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar