Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து ... மாளிகைப்புற கோலத்திற்கு வண்ணப்பொடிகள் பந்தளம் அரண்மனையில் ஒப்படைப்பு மாளிகைப்புற கோலத்திற்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
அய்யப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு: நாளை மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
அய்யப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு: நாளை மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

25 டிச
2021
10:12

சபரிமலை : சபரிமலையில் இன்று (டிச.,25) மாலை 6:30 மணிக்கு அய்யப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடக்கிறது. நாளை மதியம் மண்டல பூஜை நடக்கிறது.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் இந்தாண்டுக்கான மண்டல காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி, இன்று காலை ராந்நி பெருநாடு சாஸ்தா கோவிலிலிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும்.

பம்பையில் பக்தர்கள் தரிசனத்துக்கு பின் மாலையில் தலை சுமடு மூலம் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும்.அய்யப்ப சேவா சங்க கேரள மாநில துணைத் தலைவர் ஹரி தாசன் நாயர் தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழுவினர் அங்கியை சுமந்து வருகின்றனர்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல் மோகனசுந்தரம், விழுப்புரம் செந்தில்குமார் , ஊட்டி சந்திரசேகர்-, மதுரை செல்வராஜ்- ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர்.கோவில் முன் வந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அங்கியை பெற்று நடை அடைத்த பின் அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடக்கும். நாளை காலை 11:50 முதல், மதியம் 1:15 மணிக்குள் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். மதியம் நடை அடைத்த பின், மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழ பூஜைக்குப் பின் இரவு 9:50 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுவதுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவுபெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar