Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமணிகண்ட சுவாமி கோவிலில் மண்டல ... அர்ச்சகர் உதவித்தொகை ரூ. 3000 வழங்கும் திட்டம் துவக்கி வைப்பு அர்ச்சகர் உதவித்தொகை ரூ. 3000 வழங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹெத்தையம்மன் குண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஹெத்தையம்மன் குண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

25 டிச
2021
12:12

குன்னூர்: குன்னூர் ஜெகதளா கிராமத்தில் மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவில், கன்னி ஹெத்தையம்மன் முன்பு, பக்தி பரவசத்துடன் ஹெத்தைக்காரர்கள் குண்டம் இறங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடுகின்றனர். பேரகனி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, எப்பநாடு, கேத்தி பந்துமை ஆகிய, 14 கிராமங்களில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெகதளாவில் உள்ள கன்னி ஹெத்தையம்மன் கோவிலில் திருவிழா கடந்த மாதம் துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ்பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டவர்கள், கொதுமுடி கிராமம் வரை நடை பயணம் சென்று அருள்வாக்கு கூறினர்.

நேற்று காரக்கொரை மடிமனையில் நடந்த குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் பின்பு சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் பூசாரி கும்பம் எடுத்து வந்த பூசாரி உட்பட 11 ஹெத்தைக்காரர்கள் குண்டம் இறங்கினர். இவர்களின் காலில் மக்கள் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தன. வரும் 27ம் தேதி மடியாரை எனும் பாறை, ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு, சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கின்றன. ஏற்பாடுகளை, ஆறூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar