Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடம் நீக்கும் மகாசங்கடஹர ... ரூ.2 கோடியில் தயாரான தங்கத்தேர் விரைவில் உலா வர பக்தர்கள் எதிர்பார்ப்பு ரூ.2 கோடியில் தயாரான தங்கத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு ஜேஷ்டாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2012
10:07

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. ஆண்டாள் யானை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்தது.இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், "பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் என்றழைக்கப்படும் திருமஞ்சனம் பெருமாளுக்கும், ஸ்ரீதாயாருக்கும் நடப்பது வழக்கம். பெருமாளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஜேஷ்டாபிஷேகம் நடந்தது.ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு நேற்று (6ம் தேதி) ஜேஷ்டாபிஷேகம் என்றழைக்கப்படும் திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணிக்கு அம்மா மண்டபம் காவிரியாற்றில் கோவில் யானை ஆண்டாள் தங்க குடத்தில் பட்டர்கள் புடைசூழ புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீதாயார் சன்னதியை அடைந்தது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீதாயார் அணிகலன்கள் அப்புறப்படுத்தப்பட்டு புனித நீரினால் தூய்மை செய்யப்பட்டது. பிறகு தைலக்காப்பிடப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் ஸ்ரீதாயாரை தரிசிக்க நேற்று னுமதிக்கப்படவில்லை.இன்று  (7ம்தேதி) திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீதாயார் சன்னதி முன் காய்கனிகளுடன் சாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நடைபாதை அம்மாமண்டபத்தில் பணி துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதையுடன் கூடிய நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியது.முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றப்பின் ஸ்ரீரங்கம் வந்தபோது, தனது தொகுதிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடில் காவிரிபடித்துறையிலிருந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வரை உள்ள மெயின் ரோட்டின் ஓரத்தில், சுற்றுலாத்துறை மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்படும் என்பதாகும்.இந்த நடைமேடை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக அம்மா மண்டபம் பகுதியிலிருந்து துவங்கி நடந்து வருகின்றன.இதுகுறித்து திருச்சி நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "மேற்கூரையுடன் கூடிய நடைபாதை 6 அடி அகலம், 520 மீட்டர் நீளம், 8 அடி உயரத்தில் அமையும். தரையில் பேவர் பிளாக்குகள் பதிக்கப்படும். இருபுறமும் கம்பித் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். நடைமேடையை அடுத்துள்ள வீடு மற்றும் களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகள் அமையும் என்றனர்.இந்நிலையில் அம்மாமண்டபம் ரோட்டில் நடைமேடை அமையவுள்ள பகுதிகளில் தெருவிளக்கு கம்பங்களை உள்ளடக்கமாக மாற்றி நடும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் துவங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar