Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் சொத்துக்கள் மீட்புக்கு ... சதுரகிரி அமாவாசை வழிபாடு: டிச., 31 முதல் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரி அமாவாசை வழிபாடு: டிச., 31 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

29 டிச
2021
10:12

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களுக்கு முறையான கட்டண விபரம் உள்ளிட்டவை தெரியாததால் அவர்களை கைடுகளாக வழி நடத்தி வரும் சிலரால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது.

சபரிமலை பக்தர்கள், மேல்மருவத்துார் பக்தர்கள் தற்போது இக்கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இவர்களின் வாகனங்கள் எல்லீஸ்நகர், தெப்பக்குளத்தில் உள்ள கோயில் இடத்தில் பார்க்கிங் செய்யப்படுகின்றன. அங்கிருந்து ஆட்டோக்களில் கோயிலுக்கு செல்கின்றனர். அவர்களிடம் அறிமுகமாகும் சிலர் தங்களை கைடு என்றுக்கூறி வழிநடத்தி செல்கின்றனர். தரிசன கட்டணம் போன்ற விபரங்கள் பக்தர்களின் பார்வையில் படும்படி இல்லாததால் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு.இதை தவிர்க்க கொரோனா ஊரடங்கிற்கு முன் வடக்கு கோபுரம் தவிர மற்ற கோபுர வாசல்களில் கட்டண விபரங்கள், தரிசன நேரம் போன்றவை குறித்து துாரத்தில் இருந்தே தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் பக்தர்கள் பார்க்கும் வகையில் எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டது.

தற்போது அவை செயல்படவில்லை. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பக்தர்கள் பூட்டுகோயிலில் சட்டநாதர் சன்னதி உள்ளது. இங்கு நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் பூட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர். தற்போது அருகில் உள்ள அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர் சன்னதியிலும் பூட்டு போட ஆரம்பித்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் சன்னதி கேட்டைக்கூட திறக்க முடியாத அளவிற்கு பூட்டுகள் தொங்க ஆரம்பித்துவிடும். இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பை கோயில் நிர்வாகம் வைத்தால் வீரபத்திரர் சன்னதிகளுக்கு நல்லது. சித்திரை வீதி கோயில் பூங்காவை இரவில் பக்தர்கள் ரசிக்கும் வகையில் மின்ஒளி வசதி ஏற்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar