Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு ... ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார் ...
முதல் பக்கம் » செய்திகள்
விஞ்ஞானிகள் கணித்ததை ஆண்டாள் மெய்ஞானத்தால் உணர்த்தியுள்ளார்
எழுத்தின் அளவு:
விஞ்ஞானிகள் கணித்ததை ஆண்டாள் மெய்ஞானத்தால் உணர்த்தியுள்ளார்

பதிவு செய்த நாள்

29 டிச
2021
02:12

புதுச்சேரி : வானியல் அரிய நிகழ்வுகளை, ஆண்டாள் திருப்பாவையில் அன்றே கணித்து கூறியுள்ளார் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நடந்து வருகிறது.

நேற்று 13ம் நாள் சொற்பொழிவில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது; ஆண்டாளின் திருப்பாவை 13ம் பாசுரத்தில், வேதம் உணர்த்தும் உண்மைப் பொருளை உணர்ந்தால், இந்த்ரிய சுகங்களைக் களையச் சொல்கிறாள் என்பது தெளிவாகும். அதற்கு ஒரே வழி, சரணாகதியைத் தவிர வேறில்லைஆண்டாள் இப்பூமியில் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்ட காலத்தில், சுக்ரன் ஒரு பக்கம் தோன்ற, வியாழன் நேரெதிர் பக்கம் மறைந்த, அரிய நிகழ்வு நடந்துள்ளதை வானவியல் குறிப்புகள் பறைசாற்றுகின்றன. இத்தனைக்கும், தொலைநோக்கி என்ற கருவி கண்டுபிடிக்கப்படாத காலம்.ஆனால், ஆண்டாள் உள்ளிட்ட நம் முன்னோர்கள் மெய்ஞானம் என்ற தொலைநோக்கி மூலம் தற்போது விஞ்ஞானம் சொல்லும் பல உண்மைகளை தத்துவார்த்தமாக, மறைப்பொருளாக, உணர்த்தி உள்ளனர்.அந்த வகையில், அதிசய வானவியல் நிகழ்வு குறித்து துல்லியமாக, ஒரு வாக்கியத்தில், வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்று என ஆண்டாள் எளிதாகக் கூறியுள்ளாள்.இது போன்ற அதிசய நிகழ்வு, வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய நிகழ்வு, கடந்த 2008 டிச.,1ம் தேதி நடந்தது.


நம்மில் எத்தனை பேர் அதைப் பார்த்தோம், குறித்து வைத்தோம், உடனே ஆண்டாள் சொன்னதோடு ஒப்பிட்டுப் பார்த்து வியந்தோம்?அறிவியல் காலத்தில் வாழும் போதே நாம் இவ்வாறு அலட்சியமாக உள்ளோம். ஆனால், இந்த அரிய வானிலை நிகழ்வைக் கண்டது மட்டுமல்லாமல், வரும் சந்ததியினர் அறியும் வண்ணம் திருப்பாவையில் நயமாகப் பதிவும் செய்துள்ளாள் ஆண்டாள்.வான சாஸ்திரத்தில் வியாழனும் சுக்ரனும் ஒன்றாகத் தெரிவது அரிய நிகழ்வு. அது போன்ற நிகழ்வு, விடியற் காலையில் தெரியும் நாளிலிருந்து பத்து மாத முடிவில் மீண்டும் மாலை நேரத்திலும் தெரியும்.அவ்வாறு மாலை நேரத்தில் தெரிந்த நாளிலிருந்து இரண்டரை ஆண்டு முடிவில் மீண்டும் காலை நேரத்திலும் தெரியும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.அதன்படி, ஆண்டாள் சொன்ன, வெள்ளி எழுந்து வியாழன் உறங்கும் அபூர்வம், கடந்த 2011 மே 11ம் தேதி அதிகாலையிலும், மார்ச் 2012ல் மாலையிலும் நடந்தது எனவும், அப்போது இரு கிரகங்களும் தங்கள் வட்டப் பாதையில் வரும்போது, மிக அருகில் தோன்றின என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.மீண்டும் 2065, நவ., 22ம் தேதி, இவ்விரு கிரகங்களும் தங்கள் வட்டப்பாதையில் வரும்போது இடைவெளி சுருங்கி, ஒரே புள்ளியாக, ஒளிப்பிழம்பாகத் தோன்றக் கூடிய வாய்ப்பு உள்ளது என விண்வெளி அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar