Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி மண்டல உற்சவ விழா விஞ்ஞானிகள் கணித்ததை ஆண்டாள் மெய்ஞானத்தால் உணர்த்தியுள்ளார் விஞ்ஞானிகள் கணித்ததை ஆண்டாள் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு நிகரற்றது; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் பேச்சு
எழுத்தின் அளவு:
மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு நிகரற்றது; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் பேச்சு

பதிவு செய்த நாள்

28 டிச
2021
12:12

புதுச்சேரி-மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு நிகரற்றது என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்க்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்றைய சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையின் 12வது பாசுரத்தில் பொய்கை ஆழ்வாரை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள்.இந்த பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தை சொல்கிறாள். கன்றுக்கு பசிக்குமே என்ற எண்ணம் ஏற்பட்ட மாத்திரத்தில், கறக்காமலேயே எருமைகள் பால் சுரக்கத் துவங்கின என இந்த பாசுரத்தில் சொல்லியுள்ளார் ஆண்டாள். மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு நிகரற்றது. கூடாரை வெல்லும் என்ற 27ம் பாசுரத்தில் பால் சோறு பற்றி சொன்ன ஆண்டாள், 12வது பாசுரத்தில் பால் சேறு என்கிறார். அவ்வீட்டின் செல்வ செழிப்புக்கு தரையெல்லாம் பால் ஓடுவதை ஒரு குறியீடாக சொல்கிறாள்.கன்றை நினைத்து, உண்டு செழித்திருந்த எருமைகள் பாலை சுரந்தாலும், கன்றுகள் குடித்த பின்னும் சுரந்து கொண்டே இருந்த பால், தரையில் ஓடி, மண் புழுதியுடன் கலந்து, வீடே சேறாகி விட்டது என்கிறார்.தென்னிலங்கை கோமானை செற்ற என்ற பாசுர சொற்களில் பல உண்மை பொதிந்துள்ளது.ராவணனை கோமான் என்கிறாள் ஆண்டாள். காரணம், காமம் தலைக்கேறினாலும், ராவணன், பிராட்டியிடம் அபசாரப்படவில்லை. போகப்பொருளாக மட்டுமே அவளை கருதவில்லை.அவள் விருப்பப் பட்டால் மட்டுமே அவளை அடைவேன் என்று மதித்து, அவளிடம் தன்னை ஏற்கும்படி இறைஞ்சினான். ஆனால், தேவேந்திரன் மகன் ஜெயந்தனோ, போகம் மட்டுமே கருதி பிராட்டியிடம் அபசாரப்பட்டான். அதனால் தான் தேவனாய் பிறந்தாலும், தேவேந்திரன் மகன் ஜெயந்தன் காகாசுரம் ஆனான். ராவணன் அரசுன் ஆனாலும், கோமான் ஆனான்.இப்படி கோமான் என்ற சொல்லாடலால், ஆண்டாள் நயமாக ராமாயண நிகழ்வான காகாசுர விருந்தாந்தத்தை சொல்லாமல் சொல்லியுள்ளார். திருப்பாவையின் ஒவ்வொரு வரிகளிலும், ஆண்டாளின் சொல்லாடல் புலமை ஆழமானது.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar