Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
புறப்பற்றுதலை துறந்து எம்பெருமானை சரணடைய வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம்
எழுத்தின் அளவு:
புறப்பற்றுதலை துறந்து எம்பெருமானை சரணடைய வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

07 ஜன
2022
08:01

புதுச்சேரி: புறப்பற்றுதலை துறந்து, அகப்பற்றுடன் எம்பெருமானை சரணடைய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.

புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்றைய சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையில் 21வது பாசுரத்தை தொடர்ந்து, 22வது பாசுரத்தையும் கண்ணனை துயிலெழுப்பும் பாசுரமாக ஆண்டாள் அருளியுள்ளார்.எல்லோரும் துயிலெழுந்து விட்டனர். ஆனால் பரமனாகிய கண்ணபிரான் இன்னும் துயில் எழவில்லையே என்ற ஆண்டாளின் ஆதங்கம் இந்த பாசுரத்தில் எதிரொலிக்கிறது.இந்த பாசுரத்தில் தனக்கு மாற்று, ஒப்பார் இல்லாத எம்பெருமானின் பெருமையை உணர்த்தி, ஜீவாத்மாக்களாகிய நாம், பரமாத்மாவின் அடியவர்கள்; அடிமைகள் என்ற மன தன்மை கொள்ளும் பக்தி நிலையை சொல்வதாக அமைந்துள்ளது.அத்தகைய நிலையை அடைய நான், எனது, நமது போன்ற அகங்காரங்கள் அழிந்து, நாம் ஒன்றும் இல்லை.எல்லாம் அவனே என்ற உண்மையை உணர்கின்ற பக்தி நிலை தான் இந்த பாசுரத்தின் உள்ளுறை பொருள்.மொத்தமுள்ள 24 தத்துவங்களோடு, 25வது தத்துவம் ஆன்மா , 26வது தத்துவம் பகவான் என்கிறது வைஷ்ணவ தத்துவம்.

மனம் வேறு; குணம் வேறு. அறிவும் வேறு. அறிவு நல்லதையும் அறியும், தீயதையும் அறியும். ஆனால் மனம் எதை வேண்டுமானாலும் விரும்பலாம். குணம் என்பது செயலில் வெளிப்படுவது. மனதில் வருத்தமிருந்தாலும் சிலர் நல்லதை செய்வதைப் பார்க்கலாம். அகத்தில் இருக்கும் காரம் அகங்காரம். அது, போக வேண்டும். இப்படி ஆன்ம தத்துவங்கள் இருபத்து ஆறில், அகங்காரம் 22வது தத்துவமாக உள்ளது. அதனால் தான் ஆண்டாள் அகங்கார பங்கத்தை 22வது பாசுரத்தில் சொல்கிறாள். புறப்பற்றுதலை துறந்து, அகப்பற்றுடன் எம்பெருமானை சரணடைய வேண்டும் என ஆண்டாள் உணர்த்துகிறாள்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar