Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சுவாமிமலை முருகன் தைப்பூச விழா: ... சபரிமலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் சபரிமலையில் அறநிலையத்துறை அமைச்சர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
11:01

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை வெறிச்சோடியது. தடையை மீறி செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநிலம் முழுதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மார்கழி மாத பவுர்ணமி தினமான நேற்று அதிகாலை 4:14 முதல் இன்று காலை 6:00 மணி வரை, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் ஓரிரு வெளியூர் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்றனர். கிரிவலப்பாதை முழுதும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பக்தர்களை தடுத்து, கிரிவலப்பாதையில் செல்வோரை திருப்பி அனுப்பினர்.கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியில் சென்று வீடு திரும்பும் போது, அவர்களை பலத்த சோதனை செய்து, அப்பகுதியை சேர்ந்தவர்களா என, அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே அனுமதித்தனர். இதனால், பக்தர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர். பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது, கிரிவலப் பாதையிலுள்ள சாதுக்களுக்கு அன்னதானம் மற்றும் பண உதவிகளை செய்து செல்வர். பக்தர்கள் வராததால், சாதுக்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். திருவண்ணாமலையில் தொடர்ந்து, 23வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்பதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கந்தபுராண ஞானசபையின் முப்பெரும் விழா நடந்தது.கந்தபுராண ஞான விழா, ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், 431 வது ஆண்டு அவதார தின விழா கொண்டாடப்பட்டது.புவனகிரி, ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் ... மேலும்
 
temple news
குன்னுார்: வெலிங்டன் பால முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், ருத்ர சமஹஅபிஷேக ஆராதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar