திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 8வது நாள்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவேடுபரி உற்சவம் நடந்தது. அழகிய நம்பிராயர் கோயிலில் 13ம் தேதியிலிருந்து ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவம் 11 நாட்கள் நடைபெறுகிறது. அதில் உற்சவத்தின் 8ம் நாள் விசேஷமாகும் . அதன்படி நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 3 மணிக்கு ஜீயர் சுவாமிகள் எழுந்தருளி திருமங்கை ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் ர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு, பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து பெருமாள் குதிரை வாகனத்தில் குடைவரை வாசலில் எழுந்தருளி திருவேடு பரி உற்சவம் நடந்தது . சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் சிவசங்கரன் தலைமையில் ஜீயர் மடம் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ய்திருந்தனர்.