சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 9:௦௦ மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கியது.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், நாளை (23ம் தேதி) கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், அர்ச்சகர்கள் யாகத்தில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் இன்று (22ம் தேதி) மாலை 5.30 மணிக்கு 5ம் கால பூஜை துவங்கியது. வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு, மூன்றாம் நாளில் விசேஷ சந்தி, ஐந்தாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், மஹா பூர்ணாஹீதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்று வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை பூஜைகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடைபெறும்.