வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்: நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2022 10:01
சென்னை : வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், நாளை (23ம் தேதி) கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், அர்ச்சகர்கள் யாகத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை நடைபெறும் யாகசாலை பூஜைகளுக்கு பின், ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறும். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் முழுவதும் இன்றும் நாளையும் பக்தர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை https://www.dinamalar.com/vadapalani/index.php ல் தரிசித்து மகிழலாம்.