Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரலாறு கூறும் கல்துாண் மண்டபங்கள் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் அலகுமலை முத்துக்குமார பால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
11:01

மயிலாடுதுறை: திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதில் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநின்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக நாயகி அம்பாள் சமேத லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற மாடக்கோவில் அமைப்பில் உள்ள இத்தலம் ஹஸ்த நட்சத்திரத்திற்குரிய தலமும் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8:30 மணிக்கு கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. 8:45 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதினம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் சேதுராம குருக்கள் தலைமையில் வைதீஸ்வரன் கோவில் ரமேஷ் திருக்கடையூர் மகேஷ் உள்ளிட்ட  சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் மௌனகுரு சாமி, தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் திருமடங்களின் தம்பிரான் சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், வக்கீல் சேயோன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை  திருநாவுக்கரசு சுவாமிகள் தலைமையில் கோவில் சிப்பந்திகள் செய்துள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar