Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீனிவாச பெருமாள் கோயிலில் திருவோண ... பிரம்மதேசம் கோயில் கொடை விழா பிரம்மதேசம் கோயில் கொடை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கும்பாபிஷேக விழாவிற்கு மணிமுக்தாற்றில் புனிதநீர்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கும்பாபிஷேக விழாவிற்கு மணிமுக்தாற்றில் புனிதநீர்

பதிவு செய்த நாள்

02 பிப்
2022
12:02

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கு மணிமுத்தா நதியில் இருந்து புனிதநீர் யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி முக்கிய நிகழ்வாக மணிமுக்தாற்றில் இருந்து யாக சாலைக்கு புனிதநீர் எடுத்து வரும் நிகழ்வு நேற்று கோலாகலம் நடந்தது. காலை 7:00 மணியளவில் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் சிவாச்சாரியார்கள் இணைந்து கோபூஜை செய்தனர். தொடர்ந்து யானைகள் குதிரைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மணிமுக்தாற்றில் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் எடுத்து, சன்னதி வீதி, கடைவீதி, அய்யனார் கோயில் தெரு, தெற்குத் தெரு, கடைவீதி, தென்கோட்டை வீதி, மேலக்கோட்டை வீதி, வடக்குக் கோட்டை வீதி வழியாக யானை மீது சுமந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சிவனடியார்கள் திருவாசகம் பாடியும் கயிலை வாத்தியங்களை இசைத்தபடி ஊர்வலம் வந்தனர். அதுபோல் 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் மங்கள வாத்தியங்களை இசைத்தபடி வந்தனர்.

விழாவில் அமைச்சர் கணேசன், கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர் சந்த் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். எஸ்பி சக்தி கணேசன் தலைமையில் ஏஎஸ்பி அங்கித் ஜெயின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar