Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனந்தபத்மநாப சுவாமி கோவில் ... சதுர்முக முருகன் கோயிலில் ரதசப்தமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுத் திருவிழா முடித்து கோவிலுக்கு திருப்பினார் அண்ணாமலையார்
எழுத்தின் அளவு:
ஆற்றுத் திருவிழா முடித்து கோவிலுக்கு திருப்பினார் அண்ணாமலையார்

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
05:02

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவை முடித்துக்கொண்டு இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திருப்பிய  உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை ஏராளமான  பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை அமாவாசை முடிந்து, 7ம் நாளில் வரும் ரத சப்தமியன்று சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். இதை கொண்டாடும் வகையில், கலசப்பாக்கம் செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். இதையொட்டி நேற்று காலை, 5:00 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலிலிருந்து  புறப்பட்டு, கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்றார். செல்லும் வழியில், தனகோட்டிபுரம் கிராமத்தில், அருணாசலேஸ்வரர் அவருக்கு சொந்தமான, வயலுக்கு சென்று அங்குள்ள விளைநிலங்களை பார்வையிடும் நிகழ்வு நடந்தது. அங்கு  பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.  இதை தொடர்ந்து, கலசப்பாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருமாமூடீஸ்வரர், செய்யாற்றில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வரவேற்று, ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும், தீர்த்தவாரியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கலசப்பாக்கம் செய்யாற்றில் இந்தாண்டு நீர் இருந்ததால், பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதை தொடர்ந்து,   இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் வழங்கி, இன்று அங்கிருந்து புறப்பட்டு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்,  மீண்டும் கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பிய  உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை ஏராளமான  பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar